Wednesday, February 07, 2007

எங்கள் கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், ( Kanyakumari district ) தமிழ் நாட்டின் முப்பது மாவாட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும்.
இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது.
இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். 2001 - வது ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 1,676,034 ஆகும். இதில் 65.27% நகர் புற மக்கள் தொகையாகும். [1] மேலும் 2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.


மும்மதங்கள் சங்கமிக்கும் தெருப்பள்ளி
முன்னோர்கள் நினைவாக வாவுபலி
வானுயர உயர்ந்து நிற்கும் மலைகளடு
கதைபேசி விளையாடும் கார்மேக முகடு

source from http://tamilparks.50webs.com/tamilpoem/kanyakumari_district.html

2 comments:

kadalkanni said...

பதிவுக்கு நன்றி. ஆயினும் தகவல் பதிவுகளை விட அனுபவ பதிவுகளையே எதிர்பார்க்கிறோம்...

Aristocrat said...

Rompa nalla thamizhila ezhuthirukkireenka. Rompa nantri
visit: myworld-stephen.blogspot.com