Saturday, December 16, 2006

முட்டம் வலைப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக அண்மைக்காலங்களில் முட்டம் திகழ்கிறது. பல திரைப்படங்களில் அழகுபட காண்பிக்கப்பட்டதும் 'கடலோரக் கவிதைகள்' படத்தின் கதைத்தளமாய் அமைந்ததுமான முட்டம் பற்றிய என் பதிவொன்றை கடல் கன்னிமூலம் மீள் அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன்.

'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' வெறும் அழகியலை விளக்கும் பதிவல்ல. மீனவ கிராமம் ஒன்றின் பல இயல்களையும் வெளிக்காட்டும் பதிவு. அந்த அழகு கிராமத்தில் என் அனுபவங்களை சுவைபட அசைபோடும் பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம் பற்றி இன்னும் சில தகவல்களோடும் புதிய பதிவுகளோடும் மீண்டும் சந்திப்போம்.

2 comments:

kadalkanni said...

நன்றி அலெக்ஸ்.

பதிவுக்குள் வரும் சுட்டிகளுக்கு target=_blank தரவும். நேரடி பதிவுகள் நிறைய தர வேண்டுகிறேன்.

வடுவூர் குமார் said...

முட்டத்தை சுற்றி வந்த உணர்வு.
நன்றி "சிறில் அலெக்ஸ்"
பல நாட்களாக படிக்க நினைத்து இன்று முடிந்தது.
நிறைவான பதிவு.