Saturday, April 14, 2007

இன்று வலைப்பதிவர் சந்திப்பு

நண்பர்களே

இன்று கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது.

வலைப்பதிவர்கள் சிறில் அலெக்ஸ், மா. சிவகுமார் ஆகியோர் குமரி மாவட்டம் வந்துள்ளனர். இன்று பகல் 1 மணி அளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அவர்களைச் சந்திக்கவும் இந்த குமரிமாவட்ட வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு

சிறில் அலெக்சின் செல்பேசி எண்: 9444846025

மா. சிவகுமாரின் செல்பேசி எண்: 9884070556

Wednesday, April 11, 2007

நாகர்கோவில் பதிவர் சந்திப்பு

சிறில் அலெக்ஸின் நாகர்கோவில் வருகையை முன்னிட்டு நானும் (மா சிவகுமார்) அவரும் நாகர்கோவிலில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு ஏப்ரல் 14, சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறும். சந்திப்பிற்குப் பிறகு சிறிலின் ஊரான முட்டத்துக்குப் போவதாகவும் திட்டம் உள்ளது.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் அன்றைய தினம் நாகர்கோவிலில் இருந்தால் சந்திக்கலாம். எனது தொலைபேசி எண் : 9884070556. அதற்கு வர முடியாதவர்களை 22ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் சந்திபபில் காண ஆவலாக இருக்கிறோம்.